இரவைத் தேடாத நிலா
ஒரு வேளை
நிரந்தரமாய்ப் போனால்...
ஒரு வேளை
நிரந்தரமாய்ப் போனால்...
நிசப்தங்களின் மத்தியில்
சப்தமாக மனதில்
இன்னமும் ஒலிக்கும்
உன் கொலுசொலி ஒரு வேளை
ஒலிக்காது போனால்...
சப்தமாக மனதில்
இன்னமும் ஒலிக்கும்
உன் கொலுசொலி ஒரு வேளை
ஒலிக்காது போனால்...
உன் நினைவு ஏற்படுத்திய
காயங்கள்,
காயங்கள் உண்டாக்கிய
வலிகள்,
வலிகளுக்கு வலி தரவல்ல
என் கவிதைகள்
எனக்கு எழுத வராது போனால்...
காயங்கள்,
காயங்கள் உண்டாக்கிய
வலிகள்,
வலிகளுக்கு வலி தரவல்ல
என் கவிதைகள்
எனக்கு எழுத வராது போனால்...
ஒரு வேளை பெண்ணே
உன்னை நான் மறந்து போகக்கூடும்...
உன்னை நான் மறந்து போகக்கூடும்...
உன்னைவிடப் பேரழகியை
தினமும் பார்க்கிறேன்..
தினமும் பார்க்கிறேன்..
உன்னைவிட இனியவளை
என்றும் சந்திக்கிறேன்..
என்றும் சந்திக்கிறேன்..
உன்னைவிடக் குணத்தவர்கள்
பலரைப் பார்த்திருக்கிறேன்...
பலரைப் பார்த்திருக்கிறேன்...
உன்னைவிட எல்லாம்...
உன்னைவிட பலரும்..- ஆனால்
உன்னைப்போல ஒருத்தியும்
இங்கில்லையே...!
உன்னைவிட பலரும்..- ஆனால்
உன்னைப்போல ஒருத்தியும்
இங்கில்லையே...!